tamilnadu

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் விழா எவ்வித சாதிய அடையாளமின்றி ஆனி தேர் திருவிழாவை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

வாழும் காலத்திலேயே படைப்பாளர்களைப் போற்ற வேண்டும்

முதலமைச்சர் வலியுறுத்தல்'

சென்னை, ஜூன் 27 - வாழ்கின்ற காலத்திலேயே படைப்பா ளர்களைப் போற்ற வேண்டும் என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சாகித்ய அகா தெமி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் சிறப்புநிலை தமிழ்த்துறை இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலைஞர் குறித்த சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், “இலக்கியத்தின் வழி யில் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியை சாகித்ய அகாடமி செய்து வரு கிறது. தனது வாழ்நாளில் 80 ஆண்டு களை பொது வாழ்வுக்கு அர்ப்பணித்த வர் கலைஞர்” என்று குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற ஒரு தனி துறையை உருவாக்க ரூ.5.30 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே பல்கலைக்கழகத்தில் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகே அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவ நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் தெரிவித்தார். சாகித்ய அகாடமி விருது பெறுபவர் களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ப தன் அடிப்படையில், கலைஞரின் பிறந்த நாள் அன்று கனவு இல்லம் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக முதல மைச்சர் அறிவித்தார். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் சாகித்ய அகாடமி விருது பெற்ற 15 அறிஞர்களுக்கு கனவு இல்லம்  வழங்கப்பட்டுள்ளதாகவும், மொழி பெயர்ப்பாளர் விருது பெற்ற 10 பேருக் கும் கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைர முத்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச் சர் மு.பெ.சுவாமிநாதன், சாகித்ய அகா டமி செயலாளர் ஸ்ரீனிவாசராவ், ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டித் ஆகி யோர் கலந்து கொண்டனர்.