பல்லாவரம் பகுதியில் நடைபெற்று வரும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். அனகாபுத்தூர், திருநீர்மலை மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வீடுவீடாக சென்று ஒரே நாளில் முதல் தவணையாக 30சந்தாக்கள் சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.