சென்னை, செப். 25 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வியாழனன்று (செப்.26) மாலை தில்லி புறப்பட்டுச் செல்கிறார். வெள்ளிக்கிழமை காலை அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன. இதற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டு உள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பணிகளுக் கான நிதியையும், சமக்ர சிக்ஷா அபியான் உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங் களுக்கு தர வேண்டிய நிதி யையும் விரைந்து வழங்கு மாறு விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்கிறார். பின்னர் அன்று மாலையே சென்னை திரும்புகிறார்.