தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் பிரிவு பொன்விழா ஆண்டையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அகில இந்திய மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கிச்சுடும் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இதில் பங்கேற்று, அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு மகளிர் காவலர் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வழங்கினார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.