தகடு, தகடு ஏடிஎம் மெஷினில் நூதன முறையில் திருட்டு
அம்பத்தூர், செப். 16- அம்பத்தூர் அருகே உள்ள முகப்பேர் பாரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன்(39) என்பவர் பணம் எடுப்பதற்கு முன்பாகவே பணம் எடுத்த மாதிரி அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு நபர் தனது ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி பணம் எடுப்பதற்கு முன்பே அவரது செல்போனில் பணம் எடுத்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீனிவாசன் ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த சிலர், பணம் வரவில்லை. ஆனால் பணம் எடுத்துவிட்டதாக செல்போனுக்கு தகவல் வருகிறது. என்னவென்று தெரியவில்லை. மெஷினில் ஏதாவது பிரச்னையா என்று புலம்பியபடி சென்றுள்ளனர். இதை கவனித்த வங்கி அருகே மளிகை கடை நடத்திவரும் சந்திரசேகர் என்பவர் உடனடியாக வங்கி அதிகாரிக்கு இதுகுறித்து தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் சந்திரசேகர் சென்று, ஏடிஎம் முழுவதும் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். அந்த போட்டோவை அதிகாரிகள் பார்த்தபோது ஏடிஎம் மெஷினில் பணம் வரும் வழியில் இரும்பு தகடு வைத்து தடுத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வங்கி தரப்பில் இருந்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏடிஎம் பகுதியில் இருந்து சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா (20) என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசா ரணையில் உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஏடிஎம்மில் பணம் வரும் வழியில் இரும்பு தகடு களை வைத்துவிட்டு வெளியே காத்தி ருப்போம். பணம் எடுக்க வந்த வர்கள் பணம் வரவில்லை என்று சென்று விடுவார்கள். அதன் பிறகு நாங்கள் சென்று அந்த இரும்பு தகட்டை அகற்றிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வைத்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவா மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 2ஆயிரம் ரூபாய் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 செ.மீ. நீளமுள்ள இரும்பு தகடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.