tamilnadu

img

விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு  விழுப்புரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர் . கண்ணப்பன், எஸ்.பிரகாஷ்,  தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்டக் குழு உறுப்பினர் கோவிந்து,  அரசாங்கு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.