நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிதி உதவி, இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி, இறுதிச்சடங்குக்கான நிதி உதவி ஆகியவற்றை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 லட்சம் என்பதை ரூபாய் 2 லட்சம் என்றும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதிஉதவி ரூபாய் 20 ஆயிரம் என்பதை ரூபாய் 1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 20 ஆயிரம் என்பதை ரூபாய் 30 ஆயிரம் என்றும், இறுதிச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூபாய் 2,500 என்பதை ரூபாய் 10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை 4.8.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.