தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் அமையும் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்)-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை, ஓம்கார் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.