ஓசூர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
கிருஷ்ணகிரி, ஆக.25 - பிள்ளையார் சதுர்த்திமுன்னிட்டு ஓசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பண்டிகை நாள்களில் ஓசூர் மலா் சந்தையில் வழக்கத்தைவிட பூக்களின் விலை ஒரு வாரத்துக்கு முன்னதாகவே படிப்படியாக அதிகரிக்கும். அதேபோல பூக்களின் வரத்தும் கூடுதலாகவே இருக்கும். இந்த நிலையில், ஓசூர் மலர் சந்தையில் ஒரு கிலோ கனகாம்பரம் 1200 க்கும், குண்டுமல்லி 1000 க்கும், சாமந்தி 160 முதல் 200 க்கும், ரோஸ் 120,முதல் 160 க்கும் விற்பனையானது. அதேபோல சம்பங்கி கிலோ 200 க்கும், முல்லைப்பூ 800 க்கும், செண்டு மல்லி பூ 40 முதல் 50 க்கும் அரளி 250 க்கும் விற்கப்பட்டன.