tamilnadu

img

தேசிய மகளிர் ஆணையம் தூங்குகிறதா? - மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 திருவான்மியூர் கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இன்று  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் வன்முறை குறித்து முன்னாள் மாணவி கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவிகளை அச்சுறுத்துவதை கைவிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா, "அநியாயம், அத்துமீறல், பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் தலையிடுவோம். 

கல்லூரி நிர்வாகத்திடமும், குறிப்பிட்ட மாணவிகளிடம் மட்டுமே விசாரித்துவிட்டு, தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணையைக் கைவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் விசாரணையை கைவிட்டதாக அறிகிறோம். இதனை ஏற்க முடியாது. எதற்கெடுத்தாலும் ஓடி வந்து பரபரப்பு விசாரணை நடத்தும் தேசிய மகளிர் ஆணையம் இப்போது ஏன் மவுனம் காக்கிறது. மகளிர் ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும்” என்றார்.

;