சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவான்மியூர் கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.