கேரளாவில் அமலில் இருக்கும் , பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் கேரள அரசு சமீபத்தில் வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் வாட்டர் பெல் அடிக்கும் போது மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் வகையில் இத்திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து, தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் முறையை நடைமுறைக்குக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பாட வேளைகளில் 2-3 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிப்பதற்கு மாணவர்களுக்கு நேரம் வழங்க வேண்டும்.
மாணவர்கள் தண்ணீர் குடிக்க வகுப்பிற்கு வெளியே செல்லக்கூடாது. வகுப்பிலேயே 2-3 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
வாட்டர் பெல் மணி நேரங்கள், காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப இருக்கலாம் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.