tamilnadu

img

காதலுடன் சேர்த்து வைப்பதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை  

சென்னையில் சிறுமியை காதலுடன் சேர்த்து வைப்பதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  

விழுப்புரம் மாவட்டத்தில் பாட்டியுடன் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாட்டி சிறுமியை சென்னை காசிமேட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விழுப்புரத்தில் இருந்த சிறுமியை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.  

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் காசிமேடை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 15 சிறுமி காதல் வயப்பட்டிருப்பதை தெரிந்து வைத்துள்ளார். பின்பு சிறுமியிடம் காதலுடன் சேர்த்து வைப்பதாக ஆசை வார்த்தைக் கூறி வேலூர் மாவட்டத்தில் உள்ள நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அதனைதொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளார். வீட்டிலிருந்த நண்பரின் மனைவி, சிறுமியிடம் நடந்தை கேட்டறிந்தார். சிறுமிக்கு நடந்த கொடுமையை அவரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து சிறுமியை நண்பரின் மனைவி விழுப்புரம் அழைத்து வந்துள்ளார்.  

இதை அறிந்த போலீசார் 3 பெண் குழந்தைகளுக்கு தந்தையான வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.