மழைக்காலம் என்பதால், மானிய விலையில் விதைகள்
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
உதகை, செப்.18- தற்போது மழைக்காலம் என்பதால், மானிய விலையில் விதைகள் வழங்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். உதகை கூடுதல் ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங் கேற்ற விவசாயிகள் பேசுகையில், கூட லூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஏற் பட்ட பலத்த காற்றால் வாழை விவ சாயம் பாதித்தது. வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறையினர் சேத மதிப்பீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அதற்கான நஷ்ட ஈடு கிடைத் தால், தற்போதுள்ள சூழ்நிலையில் பய னாக இருக்கும். மானியத் திட்டத்தில் பாகற்காய் பயிர் செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும். வாழையில் ஏற்ப டும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பேசிலோமைசிஸ், சனோசினஸ் உள் ளிட்ட மருந்துகளை அதிகளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயத்திற்கு ஏற்ற மழைக்காலம் என்பதால், விவசாயிகளுக்கு மானிய விலையில் கேரட், பீட்ரூட் போன்ற விதைகளை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பட்டா நிலத் திலுள்ள கிணறுகளுக்கு சொந்த செல வில் சிமெண்ட் வளையம் அமைக்கும் பணிக்கு, குப்பேட்டா இயந்திரம் பயன்ப டுத்த அனுமதி வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் குடியிருப்பு மற் றும் விளை நிலங்களில் வனவிலங்கு கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத னைக் கட்டுப்படுத்த தேவையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தினர். இதன்பின் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி பேசுகை யில், நடப்பாண்டு பெய்த கனமழையின் போது உதகை, குன்னூர் மற்றும் கூட லூர் பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதத் திற்கான இழப்பீடு வழங்க, 102 ஹெக் டர் பரப்பளவிற்கான இழப்பீடு தொகை ரூ.17 லட்சம், 37 விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. தோட்டக் கலைத்துறையின் வாயிலாக விவசாயப் பணிகள் மேற் கொள்ள மட்டுமே சிறிய வகை குப் பேட்டா இயந்திரம் பயன்படுத்த அனு மதி வழங்கப்படுகிறது. இதர பணிக ளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப் படுவதில்லை. தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தில் பரப்பு விரி வாக்கம் இனத்தில், 120 ஹெக்டர் பரப்ப ளவிற்கு பீட்ரூட் மற்றும் பீன்ஸ் விதை கள் வட்டார அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது, என்றார்.