tamilnadu

சட்டவிரோத செயல்கள்: 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சட்டவிரோத செயல்கள்: 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சட்டவிரோத செயல்களில் ஈடு பட்ட 2 காவல் அதிகாரிகளை பணி யிடை நீக்கம் செய்து, சேலம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதி யைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் அரசு மதுபாட்டில்களை கள்ளச்  சந்தையில் விற்பனை செய்து வருவ தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் வீரகனூர் காவல் நிலையத்தில்  பணியாற்றும் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் என்பவரிடம் போனில் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. அதில், ‘30 பாட்டில்கள்  மட்டும் ஓடுவதால் ஒன்றும் கட்டுபடி யாகவில்லை. 1500 ரூபாய் கொடுப்ப தாக’ கூறுகிறார். அதற்கு மறுமுனை யில் பேசும் காவல் உதவி ஆய்வாளர்  கருப்பண்ணன், வழக்கு சம்பந்தமாக கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளுக்கு  ரூ.2,500 கேட்பதாக கூறுகிறார். இந் நிலையில், கடந்த பிப்.25ஆம் தேதி யன்று வீரகனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்பண்ணன், சேலம் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டார். தொடர்ந்து விசாரணை நடை பெற்று வந்த நிலையில், கருப் பண்ணன் பேசிய ஆடியோ உறுதியா னது. இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், கருப்பண்ணனை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட் டார். பணமோசடி  இதேபோன்று, சேலம் மாநகர  காவல் ஆயுதப்படையில் வாகன  பராமரிப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பாஸ்கர். இவர் ஆயுதப்படை அருகி லுள்ள லைன்மேடு காவலர் குடி யிருப்பில் வசித்து வந்தார். சேலம்  மாநகர காவல் துறையில் பணியாற் றும் காவலர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்களிடம் சீட்டு நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி பலரி டம் கடன் பெற்று அதனை திருப்பி  செலுத்தவில்லை. வட்டி ஆசை காட்டி பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர்  அலுவலகத்தில் பணியாற்றும் யோகாம்பாள் என்பவர், தனக்கு வர வேண்டிய சீட்டுப்பணம் ரூ.10  லட்சத்தை, பாஸ்கர் அபகரித்துக் கொண்டு மோசடியில் ஈடுபடுவ தாக, காவல் ஆணையரிடம் புகார ளித்தார். அதன்பேரில் துணை ஆணையர் கீதா, கூடுதல் துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர் பித்தனர். அந்த அறிக்கையின் அடிப் படையில், சிறப்பு உதவி ஆய்வா ளர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் பிரவீன்  குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாஸ்கரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சீட்டு போட்டு பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் என வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளார்.