ஏடிஎம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி மோசடி
கோவை, அக்.13- ஏ.டி.எம் மையம் அமைக்கக் உரிமம் தருவதாகக் கூறி சுமார் 150 க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர் கள் மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் அளித்தனர். கோவை நவ இந்தியா பகுதி யில் செயல்பட்டு வரும் ZPE ATM என்ற தனியார் நிறுவனம், ஏ.டி.எம் மையம் உரிமம் பெற முதலீடு செய் தால் அதிக லாபம் ஈட்டலாம் என இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் கடந்த 2023 இறு தியில் இருந்து விளம்பரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் ஏ.டி.எம் இயந் தரம் வழங்கப்படும், மேலும் ஒவ் வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், ஏ.டி.எம் பயன்பாட்டிற்கு ஏற்ப கமிசன் வழங் கப்படும் என விளம்பரம் செய்துள்ள னர். அதே போல ஏ.டி.எம் மையம் கடை வாடகையை 60 சதவீதம் நிறு வனமும், 40 சதவீதம் பயணாளிக ளும் செலுத்த வேண்டும். மேலும் பண பரிவர்த்தனைகள் செய்யும் லாபத்தில் 60 சதவீதம் நிறுவனத்திற் கும், 40 சதவீதம் பயணாளிக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ள னர். இதை நம்பி கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளம், கர் நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் லட்சக்கணத்தில் பணத்தை கட்டி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். வைப்பு தொகையாக ரூ.2 லட்சம் பெற்று கொண்டு பத்திரத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதில் பணம் கட்டிய சிலருக்கு ஏ.டி.எம் இயந்திரத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு கொடுத்த ஏ.டி.எம் இயந்திரங்களும் ஒரு வாரம் மட் டுமே வேலை செய்துள்ளது. அதன் பின் பணம் நிரப்பவும் ஆட்கள் வர வில்லை, இயந்திரமும் வேலை செய்யாமல் இருந்ததாக தெரி கிறது. இதில் பலர் பணத்தை முத லீடு செய்து பல மாதங்களாக காத் திருந்தும் இயந்திரமும் கொடுக்கா மல், பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சுமார் 76 பேர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்க ளன்று புகார் அளித்துள்ளனர். காவல் துறை புகார் மீது உரிய நடவ டிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும், உரிமையாளர் துரை சாமி, ரம்யா துரைசாமி ஆகி யோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனி டையே கேரளாவில் தனியார் தொழில் ஆலோசனை மையம் சார்பில், zpee ATM நிறுவனத்தில் 10 பேர் ஏ.டி.எம் மையம் அமைக்க ரூ.17.50 முதலீடு செய்து ஏமாந்துள் ளனர். இதுகுறித்து கேரளா தனியார் ஆலோசனை மைய ஊழியர் கூறும் போது, நாங்கள் ஹிட்டாச்சி உள் ளிட்ட பல்வேறு தனியார் ஏ.டி.எம் நிறுவனத்தில் உரிமம் பெற்று வழங்கி வருகிறோம். இந்நிலை யில் கோவையில் உள்ள zpee ATM நிறுவனத்தின் விளம்பரம் தொடர்ந்து கேரளாவிலும் வந்தது. இதை நம்பி எங்கள் நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்ய விரும்பிய 10 பேர் ரூ.17.50 லட்சம் பணம் கொடுத்தனர். ஆனால் இதுவரை இயந்திரமும் கொடுக்கவில்லை, பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையும் மக்களுக்கு போய்விட்டது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.