மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி, ஆக.1- கால்நடை மற்றும் பால் வளத்தை காப்பாற்ற, மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் வியாழனன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி கள் பேசுகையில், பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிக ளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் செயல்படுத்தப் படவில்லை. ஆனால், பிரிமியம் மட்டும் சரியாக வசூலிக்கின்ற னர். வாகன காப்பீடு திட்டத்தில் வழங்குவதுபோல, பயிர்க ளுக்கான காப்பீடு திட்டத்திலும் உரிய இழப்பீடு வழங்குவது அவசியம். தருமபுரி மாவட்டத்தில் பல இடங்களில் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலங்கள் அரசுத்திட்டங்களுக்கு எடுக்கப் பட்டு கட்டடங்களாக மாறிவிட்டன. அதற்குப் பதிலாக மாற்று நிலங்கள் முழுமையாக ஒதுக்கப்படவில்லை. மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தால் மட்டுமே மாவட்டத்தில் கால் நடை மற்றும் பால் வளத்தையும் காக்க முடியும். மாவட்டத் தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். வேர்ப்புழுத் தாக்குதலால் கரும்பு சாகு படி பெருமளவில் பாதிப்படைந்து வருகிறது. பயிர்களை பாது காக்க நடவு பருவத்துக்கு முன்னதாகவே வேளாண், சர்க்கரை துறையினர் உரிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரி விக்க வேண்டும். காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற நீண்ட காலமாக வலியு றுத்தி வருகிறோம். இத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நிதிதான் சிக்கலாக இருந்தால், திட்டத்தை நிறைவேற்று வதற்கான செலவை விவசாயிகளே ஏற்கவும் தயாராக உள் ளோம். ஹெச்.புதுப்பட்டி சுங்கச்சாவடியில் சுற்றுவட்டார விவ சாயிகளின் வாகனங்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்நிகழ்வில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் பிரியா, பாலக்கோடு கூட்டுறவு சர்க் கரை ஆலை மேலாண் இயக்குநர் ரவி, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப் பதிவாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.