tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காலமானார்

கோவை, மே 7 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்  குழு உறுப்பினர் என்.ஜாகீரின் தாயார் என்.ஹபீபா பீவி (90)  அவர்கள், வயது மூப்பின் காரணமாக புதனன்று மதியம் கணபதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கோவை கணபதி, லட்சுமி புரம், வஉசி நகரில் இருந்து அவ ரது இறுதி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) மதியம்  12.30 மணியளவில் பூ மார்க்கெட் அடக்க ஸ்தலத்தில் நடை பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெருங்காற்றால் மின் கம்பங்கள் சாய்ந்தது

கோவை, மே 7 – கோவையில் புதனன்று மாலை திடீரென வீசிய சூறைக் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக காந்திபுரம் வி. கே.கே. மேனன் சாலையில் அடுத்தடுத்து ஆறுக்கும் மேற் பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பான சூழல் நிலவி யது. கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலை யில், புதனன்று மதியம் முதல் கோவையில் மேகமூட்டம் நிலவி யது. சுமார் 4 மணியளவில் காந்திபுரம், ராமநாதபுரம், உக்க டம், சிவானந்தா காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிக ளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் போது, காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் இருந்த  பெரிய புங்கை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அவ்வழி யாகச் சென்ற உயர் மின்னழுத்த கம்பியின் மீது விழுந்தது.  இதன் விளைவாக, அந்த சாலையில் இருந்த அடுத்தடுத்த ஆறு மின் கம்பங்களும் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் மின்  இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் அளித்தனர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த வழியாகச் செல்லும் அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்தனர். மேலும், மின் கம்பிகள் அறுந்து விழாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் வேரோடு சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்ட னர். இந்த சம்பவத்தால் காந்திபுரத்தில் இருந்து சித்தாபுதூர்  செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முதல்  கட்டமாக மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்ட பின்னர்  போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சாய்ந்த மின் கம்பங்க ளில் இருந்து மின் கம்பிகளை அகற்றும் பணியிலும், மின்  இணைப்புகளை சீர் செய்யும் பணியிலும் மின்வாரிய ஊழி யர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சூறைக்காற்றின் காரணமாக மரம் விழுந்து மின் கம்பங் கள் சாய்ந்ததால் சித்தாபுதூர் மற்றும் ராமகிருஷ்ணா சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மேலும், அதிக  அளவிலான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம்  உள்ள சாலையில் ஆறுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தபோதும், யாருக்கும் எந்தவித காயமும் நல் வாய்ப்பாக ஏற்படவில்லை.

ஒகேனக்கலில் உயிரிழப்பை தடுக்க ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

தருமபுரி, மே 7- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆழமானப் பகுதிக்கு சென்று  குளிக்கும் சுற்றுலாப் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணித்து  ஒகேனக்கல் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணி கள், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு  வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள  ஆழமானப் பகுதிகளான முதலைப் பண்ணை, ராணிப்பேட்டை,  ஊட்டமலை பரிசல் துறை, ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வரு கின்றனர். காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத் தும் கேட்காத நிலையில், பலர் நீரில் மூழ்கி உயிரிழக் கும் நிலை தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக தருமபுரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அறிவுத்தின்படி, ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் ஆழமான பகுதிகளில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ட்ரோன் மூலம் கண் காணித்து வெளியேற்றி வருகின்றனர். இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தருமபுரி, மே 7- காரிமங்கலம் அருகே ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக்கு டங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், திண்டல் ஊராட்சிக்குட்பட்டது உச்சம்பட்டி. இக்கிராமத்தில் கடந்த சில  மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கப்பட வில்லை. வாரத்திற்கு ஒருமுறை கூட போதுமான குடிநீர்  வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரி டம் கேட்டால் உரிய பதில் அளிக்காததால், காரிமங்கலம் வட் டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புகாராளித்தனர்.  ஆனாலும், இதுவரை குடிநீர் வழங்காததால் ஆவேசமடைந்த  அப்பகுதி மக்கள், புதனன்று மொரப்பூர் - காரிமங்கலம் நெடுஞ் சாலையிலுள்ள உச்சம்பட்டி சாலையின் குறுக்கே காலிக்கு டங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் சாலை மறியலில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்ற னர்.

ணியின்போது கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

சேலம், மே 7- சேலத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய  நிலையில், செல்போன் நிறுவனத்தின் கம்பம் சரிந்து விழுந்த தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து பெற்ற ஒப்பந்தத்தின் பேரில், குடிநீர் குழாய் அமைக்கும் பணி,  பட்டர்பிளை பாலத்தில் இருந்து நெத்திமேடு செல்லும்  சாலையில் கொடம்பைக் காடு பகுதியில் மேற்கொள்ளப்பட் டது. சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியண்ணன் (35), சித் தன் (48), பூவரசன் (23) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு  வந்தனர். இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அருகே குழி  தோண்டிய நிலையில், ஜியோ நிறுவனத்தின் கம்பம் சரிந்து  விழுந்ததில் மூன்று பேருக்கும் தலையில் அடிபட்டது. இதில்  பெரியண்ணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காய மடைந்த சித்தன், பூவரசன் ஆகியோர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அன்ன தானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை, மே 7-  இந்திய இராணுவம் நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் அமைந்தி ருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்த சூழ்நிலையில், நாடு  முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு  வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பய ணிகளின் உடைமைகள் அதிநவீன ஸ்கேனர் கருவிகள் மூலம்  முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனு மதிக்கப்படுகின்றனர். மேலும், சாதாரண உடையில் காவல் துறையினர் ரயில் நிலைய நடைமேடைகளில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிபிஐ மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர் மாரடைப்பால் மறைவு

திருப்பூர், மே 7– திருப்பூரில் நடைபெற்ற இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றி ருந்த, அக்கட்சியின் தருமபுரி மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் காசி.தமிழ்க்குமரன் (58) திடீர் மாரடைப்பால் காலமா னார். திருப்பூர், ராயபுரம் எம்.கே.எம். ரிச் ஹோட்டலில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக்குழுக் கூட்டம்  செவ்வாய், புதன் ஆகிய இரு  நாட்கள் நடைபெற்றது. இந்நிலை யில், புதனன்று மதிய உணவு இடை வேளையின்போது, உணவு சாப் பிட்டு விட்டு அரங்கத்திற்கு வந்த  தமிழ்க்குமரனுக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவ ரைப் பரிசோதித்துப் பார்த்து, குமார்நகரில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு சென்றனர். அங்கு அவ ரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்க்குமரன் மாரடைப்பு காரண மாக உயிரிழந்து விட்டதாகத் தெரி வித்தனர். இதையடுத்து மாநிலக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட் டது. தமிழ்க்குமரன் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக் கப்பட்டது. அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு பழச்சாறு கொடுத்து வரவேற்ற இஸ்லாமியர்கள்

கோவை, மே 7 – கரும்புக்கடை ஸ்ரீ முத்துமாரி யம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் பால்குடம் மற்றும்  அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்க ளுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர்  மற்றும் பழங்கள் வழங்கி வர வேற்ற செயல் மக்கள் ஒற்று மையை பறைசாட்டி உள்ளது. கோவை கரும்புக்கடை பகுதி யில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி யம்மன் கோவிலில் வருடாந் திர சித்திரை திருவிழா வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 32 ஆவது சித்திரை  திருவிழா புதன்கிழமை நடைபெற் றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பால்கு டம் மற்றும் தீச் சட்டி ஏந்தி ஊர்வல மாகச் சென்ற னர். கரும்புக்கடை யில் இருந்து சார மேடு வழியாக நஞ் சுண்டாபுரம் வரை  இந்த ஊர்வலம்  நடைபெற்றது. ஊர்வலம் சாரமேடு அருகே  வந்தபோது, அங்குள்ள மஸ்ஜி துல் ஹூதா பள்ளிவாசல் ஜமாத் நிர் வாகிகள் மற்றும் இஸ்லாமியர் கள், பால்குடம் மற்றும் பூச்சட்டி  ஏந்தி வரும் பக்தர்களுக்கு தண் ணீர், பிஸ்கட் மற்றும் பழங்கள்  வழங்கி அன்புடன் வரவேற்றனர். மேலும், கோடை வெயிலின் தாக் கம் அதிகமாக இருந்ததால், சில  பக்தர்களின் உடலில் தண்ணீர்  ஊற்றியும் குளிர்வித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று இஸ்லாமியர்கள் பக்தர்க ளுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த ஆண்டும் இந்து பக்தர்களை இஸ் லாமியர்கள் வரவேற்றது மக்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக அமைந்தது.

லகிரிக்கு 12 மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு தடை

உதகை, மே 7 –  நீலகிரி மாவட்டத்தில் போக்குவ ரத்து நெரிசலை குறைக்கும் வகையி லும், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 171  பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சி யர் இந்த தகவலை வெளியிட்டார். ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில்  முதலுதவி பெட்டியில் தேவையான மருந்துகள் இருப்பு மற்றும் அவைக ளின் காலாவதி தேதி, அவசரகால வழி கள் முறையாக திறக்கப்படுகிறதா என் பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து, ஆட்சியர் லட்சுமி  பவ்யா தண்ணீரு செய்தியாளர்களிடம் கூறுகையில், 12 மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான கனரக  வாகனங்களுக்கும் நீலகிரி மாவட்டத் திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவ தாக தெரிவித்தார். இந்த உத்தரவை மீறு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித் தார். மேலும், பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் தற்போது இ-பாஸ் முறை  நடைமுறையில் இருப்பதால், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடை பெற்று வரும் 127 ஆவது மலர் கண் காட்சியை சுற்றுலாப் பயணிகள் சிரம மின்றி கண்டு ரசிக்கும் பொருட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட் டும், ஏற்கனவே 5 நாட்களுக்கு திட்ட மிடப்பட்டிருந்த மலர் கண்காட்சி தற் போது 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், நீல கிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் வாக னங்களில் யாரும் படுத்து உறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.