‘கைகளால் ஓடுகளை உடைத்து மாணவர்கள் சாதனை’
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான 132 கராத்தே மாணவர்கள் ஒரே நேரத்தில் கைகளால் ஓடுகளை உடைக்கும் நிகழ்வு சனியன்று நடைபெற்றது. இதில் 132 மாணவர்களும் ஒரே நேரத்தில் கைகளால் ஓடுகளை உடைத்து சாதனை படைத்தனர். இந்த நிகழ்வை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் உலக சாதனையாக பதிவு செய்து சான்றிதழ்களை வழங்கினர்.