பல தலைமுறைகளாக அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்பவர்கள், சிறு வணிகம் செய்வோர், சாகுபடி செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களை கிரயம் செய்து தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சமய நிறுவனங்களில் குடியிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் அமைப்பாளர் பி.கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். மாநில விவசாயிகள் சங்க பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சதானந்தம், துணைச் செயலாளர் யு.மூர்த்தி, சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் பேசினர்.