tamilnadu

img

பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ராமநாதபுரம் மவாட்டம் உச்சிப்புளியை அடுத்த  கலக்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர் கார்த்தீஸ்வரன், மதிய வேளையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை ஆசிரியர் ஒருவர் கூறியதின் பேரில் இயக்கியுள்ளார். அப்போது, மாணவன் மீது மின்சாரம் தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் குறித்து  மாவட்ட கல்வித்துறை அதிகாரி பால தண்டாயுதபாணி பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.
 

;