தூத்துக்குடி, மே 22-ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் பலியான13 பேரு க்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில்முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமை வகித் தார். ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் ராகவன், ஒன்றியச் செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ,மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான்,சீனிவாச ராகவன்,சுப்பு முத்துராமலிங்கம், வாமனன், சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ரசல், கே.பி.ஆறுமுகம், கு.ரவீந்திரன், ர.பேச்சிமுத்து,முருகன், சண்முகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கள் பொன்ராஜ்,குமாரவேல், புவிராஜ் ,பி. பூமயில், முத்து, ஜோதிபாசு,முத்துக்குமார், ரவிச்சந்திரன், பாலகிருஷ் ணன், ஆறுமுகம், நம்பிராஜன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜாய்சன் மற்றும்துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம்பட்டவர்கள் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதில் சுந்தர்ராஜன் பேசுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட 13 பேர் தூத்துக்குடி மக்களுக்காக இறக்கவில்லை. தமிழக மக்களின் சுற்றுச்சூழலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உயிர் நீத்துள்ளனர் என்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுவான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, சுரண்டப் பட்ட, நசுக்கப்பட்ட, மக்களுக்கு ஆதரவான கட்சி வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து விளம்பரம் வாங் காத ஒரே பத்திரிகை தீக்கதிர்.தீக்கதிர் பத்திரிகை குரல் மறுக்கப்பட்டவர்களின் குரலாகவும்,உரிமை மறுக்கப்பட்டவர்களின் உரிமைக் கான ஆயுதம் ஆகும் என்றார்.