மயிலாடுதுறை: பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டை போட்டி புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இதில் ஏவிசி கல்லூரி சார்பில் பெண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மாணவி ஆர். சிந்துஜா பி.காம் முதலாம் ஆண்டு மூன்றாம் இடமும், ஆண்களுக்கான 46 கிலோ எடை பிரிவில் மாணவர் எஸ்.ராகுல் பிசிஏ முதலாம் ஆண்டு மூன்றாம் இடம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கி.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞானசுந்தர், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜெ.ராஜ்குமார், எம்.கீதா, பேராசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பாராட்டி வாழ்த்தினர்.