சென்னை,ஜூன் 10-காவல் உதவியாளர்களுக்கான தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் 1,299 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 28,29ல் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.