சென்னை,ஜூன் 10- தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் காளியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை நிறைவடைந்தது, 7 சுயேட்சைகள் உட்பட மொத்தமாக 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்ற நிலையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டிலிருந்து திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.