சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்
இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடிக்கடி பேசுகிறார். ஆனால் ஏன் பிரதமர் மோடி பேசவில்லை? டிரம்பைக் கோபப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்ல மோடி பயப்படுகிறாரா? பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி இதுபற்றி அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆந்திர காங்கிரஸ் தலைவர் சர்மிளா
பிரதமர் மோடி ஆந்திர மக்களுக்கு என்ன செய்துள்ளார்? ஆந்திராவுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளார். மக்கள் உண்மையான வளர்ச்சி, நியாயமான சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். வெறும் பிரச்சார பேச்சுகளை அல்ல.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் பேரணிகளில் கலந்துகொள்ளவே ஆர்வமாக உள்ளார். ஆனால் மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார். நிதிஷ் குமார் மோடியிடம் முற்றிலும் சரணடைந்துவிட்டார்.'ஜம்மு-காஷ்மீர் கல்வி அமைச்சர் சகினா
ஜம்மு-காஷ்மீர் கல்வி அமைச்சர் சகினா
காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. அதனால் அனைத்து தனியார், அரசு பள்ளிகளும் ஜூலை 1 முதல் 10ஆம் தேதி வரை 10 நாள் கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. ஆளுநர் இதனை கண்டுகொள்ளாததால் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.