திண்டுக்கல்லில் பாஜக - இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்
சிபிஎம் மாநில செயற்குழு கடும் கண்டனம்!
சென்னை, ஜூன் 20 - திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கள் மீது பாஜக - இந்து முன்னணி குண்டர்கள் நடத்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதலுக்கு கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது தொடபாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வரு கிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் ஆர். சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர். சரத்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பாக்கியம், சண்முக வேல் ஆகியோர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கட்சி யின் தோழர்களையும் கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கேயும் கடுமை யாக தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அம்பலமாவதால் ஆத்திரம் மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக குண் டர்கள் இந்த தாக்குதலை அரங்கேற் றியுள்ளனர். இந்த கொலை வெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது. தாடிக்கொம்பு மற்றும் திண்டுக் கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடி யாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் வலி யுறுத்தியுள்ளார்.