கியூப ஆதரவுப் பிரச்சாரம் - நிதி திரட்டல்
சென்னையில் எம்.ஏ. பேபி துவக்கி வைத்தார்
சென்னை, ஜூன் 20 - அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த பொருளாதாரத் தடைகளால் நெருக்க டியை எதிர்கொண்டு வரும் சோசலிச கியூபாவுக்கு ஆதரவான பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் இயக்கம் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், கியூபா ஆதரவு தேசியக்குழுவின் அகில இந்திய பொறுப்பாளருமான எம்.ஏ. பேபி, ஆத ரவு இயக்கத்தைத் துவக்கி வைத்தார். 60 ஆண்டுக்கும் மேலான அமெரிக்காவின் தடை இன்றைய அரசியலில் ஏகாதிபத்தி யம் உலகெங்கும் போர்ப் பதற்றத்தை உருவாக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய சூழலில், ஏகாதி பத்தியத்தை எதிர்த்து சோசலிச நாடுகள் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக, 1959-இல் நடந்த கியூபா சோசலிச புரட்சிக்கு பின் 1962 துவங்கி இன்றுவரை அதனுடைய ஆயுட்காலம் முழுவதும் கியூபா அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கியூப மக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 65 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். துணிந்து எதிர்கொள்ளும் சோசலிச கியூப மக்கள் கியூபாவினுடைய தொழில், வர்த்த கம் முடக்கப்படுகிறது. கியூபாவுக்கான கப்பல், விமானப் போக்குவரத்து, வாணிபம், சுற்றுலா செல்வது ஆகியவை உட்பட அனைத்தும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது. கியூபா மீது அமெரிக்கா மீண்டும் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து அதை தனிமைப்படுத்தி வருகிறது. இன்று கியூபாவில் ஏற்பட்டு வரக்கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் மக்கள் வாழ்க்கை மீது வந்து கொண்டி ருக்கக் கூடிய ஒரு சில தாக்குதல்க ளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுபிடிகளும், வர்த்தக தடைகளுமே பிரதான காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவை அனைத்தை யும் மீறி தன்னுடைய சொந்த செல்வாக்கில் கௌரவத்துடன் கியூபா தலைநிமிர்ந்து நின்று வருகிறது. இந்த சூழலில் கியூபா ஆதரவு என்பது மிக முக்கியமான சர்வதேச நட வடிக்கையாக பார்க்கப்படுகிறது. பாராட்டுக்குரிய மருத்துவ உதவிகள் ஐக்கிய நாடுகள் அவையில் தொடர்ந்து கியூபா மீதான தடையை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பொதுச்சபையில் நிறைவேற்றினால் அந்த தீர்மானம் பாதுகாப்புச் சபையில்அமெரிக்காவால் வீட்டோ செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப் படுகிறது. தீவிரவாதத்தை ஆதரிக் கிற நாடுகள் பட்டியலில் கியூபாவை சேர்த்து கியூபாவை உலக அமைதிக்கு வில்லனாக காட்டுகிற அயோக்கியத்தனமான காரியத்தை யும் அமெரிக்கா செய்து வருகிறது. இதற்கு நேர்மாறாக, கியூபா மனிதாபிமான ரீதியாக உலகம் முழு வதும் உள்ள நாடுகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கியூபாவின் மருத்துவர்கள் பயமறி யாமல் ஐரோப்பிய நாடுகள் அனைத் திற்கும் சென்று மருத்துவ உதவி செய்ததை உலகம் மறந்து விட வில்லை. கியூபாவுக்கு ஆதரவாக தேசியக்குழு அமைப்பு கியூபாவுக்கு ஆதரவாக சர்வ தேச அளவில் ஆதரவு திரட்டுவதற் காக பலவிதமான அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்தியா வில் “கியூபா ஆதரவுக்கான தேசியக் குழு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அத னுடைய மாநில அமைப்பு உரு வாக்கப்பட்டு, மாநில மாநாட்டை நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டு உள்ளனர். இந்த அமைப்பின் முன்முயற்சி யில் கியூபாவுக்கு ஆதரவு தெரி விக்கும் மற்றும் நிதி திரட்டும் இயக்கம் சென்னையில் வெள்ளிக் கிழமையன்று துவங்கியது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எம்.ஏ. பேபி கண்டனம் நிகழ்ச்சிக்கு கியூப ஆதரவு தேசியக் குழுவின் தமிழக அமைப் பின் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி அமைப்பின் பொதுச்செயலாளர் ஐ. ஆறுமுகநயினார் பேசினார். அத னைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு அதன் முக்கி யத்துவம்’ குறித்து உரையாற்றி னார். நிறைவாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், கியூபா ஆதரவு தேசியக்குழுவின் அகில இந்திய பொறுப்பாளருமான எம்.ஏ. பேபி சிறப்புரையாற்றினார். அப்போது, இன்றைய புவி அரசியல் சூழலை விளக்கியதுடன், இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு, வளைகுடா நாடுகளிலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக காசாவிலும் நடத்தி வரும் இனப்படுகொலை களை எம்.ஏ. பேபி கண்டித்தார். ஈரா னுக்கு எதிராக இன்று, இஸ்ரேலால் தொடுக்கப்பட்டிருக்கக்கூடிய போர் கண்டனத்திற்குரியது என்றார். உட னடியாக போர் நிறுத்தம், பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளுக் குத் தீர்வு காணப்பட வேண்டுமென் பதை அவர் வலியுறுத்தினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர்.
சில நிமிடங்களில் திரண்ட ரூ. 3.30 லட்சம் கியூப ஆதரவு நிதி
கியூப ஆதரவு - நிதி திரட்டும் இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சியிலேயே, 60-க்கும் மேற்பட்டோர் தனியாகவும், 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் கியூப ஆதரவு நிதியாக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாயை எம்.ஏ. பேபியிடம் வழங்கினர். இந்த நிதி திரட்டும் இயக்கம் ஜூலை மாதம் வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கியூபா ஆதரவு தேசியக்குழுவின் பொருளாளர் சி.பி. கிருஷ்ணன் நன்றி கூறினார். கியூபா ஆதரவு தேசிக்குழுவிற்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. நிதியளிப்போர் அந்த வங்கிக் கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ், நெப்ட் மூலமாக ஆன்லைனில் அனுப்பலாம். ஜி.பே. மூலம் அனுப்புபவர்கள் வங்கி கணக்கிற்கு ஐஎப்எஸ்சி கோடுடன் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.