tamilnadu

ரேசன் கடைகளில் ஒருமுறை மட்டுமே கைவிரல் ரேகை பதிவு

ரேசன் கடைகளில் ஒருமுறை மட்டுமே கைவிரல் ரேகை பதிவு

சென்னை, ஜூன் 20 - தமிழகத்தில் உள்ள ரேசன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும்போது ஒன்றிய அரசு திட்ட அரிசிக்கு ஒரு  முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும்  என மொத்தம் 2 முறை ரேசன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டியிருந்தது. இதனால், பொருட்கள் விநியோகம் செய்வதில் பெருமளவில் காலவிர யம் ஏற்பட்டது. ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டை தாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு, கால விரயத்தை குறைக்க தமிழக அரசின் உணவு பொருள்  வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற னர். முன்னுரிமை ரேசன் அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய ரேசன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒரே ஒரு முறையே கைவிரல் ரேகை  அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என்ற வகை யில் மின்னணு விற்பனை எந்திரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பொருட்களும் குறைந்த  நேரத்தில் வழங்கப்படுவதால் ரேசன் அட்டைதாரர்கள் காத்தி ருக்கும் நேரம் கணிசமாக குறைந்துள்ளது. வழக்கத்தை விட  சுமார் 20 முதல் 25 ரேசன் அட்டைகளுக்கு கூடுதலாக பொருட்களை  வழங்க முடிகிறது என ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.