சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சார நிறைவுப் பொதுக்கூட்டம் : எம்.ஏ. பேபி பங்கேற்றார்
ஒன்றிய பாஜக அரசின் மதவெறி, மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை கண்டித்தும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் உட்பட எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 11 முதல் 20 வரை தமிழகம் முழுவதும் வீடு, வீடாக கிளர்ச்சிப் பிரச்சார இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. இதன் நிறைவாக கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில், அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சிறப்புரையாற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.