tamilnadu

img

ஆக.31, செப்.1-தீண்டாமை ஒழிப்பு முன்னணி 5 ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்

ஆக.31, செப்.1-தீண்டாமை ஒழிப்பு முன்னணி 5 ஆவது மாநில மாநாடு  மயிலாடுதுறையில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம்

மயிலாடுதுறை, ஜுன் 20-  மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1  ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் மயிலாடுதுறை இராஜேஸ்வரி மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது.  அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.விஜய் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  சி. மேகநாதன் வரவேற்று பேசினார். மாநில சிறப்பு  தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.  செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், துணை பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநிலச்  செயலாளர் பழ.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக பி.சீனிவாசன், செயலாளராக சி. மேகநாதன், பொருளாளராக த.லீலாவதி உட்பட துணைத் தலைவர்களாக 19 பேரும், துணைச் செய லாளர்களாக 19 பேரும் உள்ளடக்கிய 151 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  “சாணிபால் சவுக்கடி கொடுமைக்கு! நம் முன்னோர்கள் முடிவுரை எழுதிய மண்ணில்” மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி, வரவேற் புக் குழு அமைப்பு கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் வலைதளத்தை மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு வெளியிட்டார். வலைதள  முகவரி அடங்கிய பதாகையை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.  மாநாட்டிற்கான உணவு மற்றும் பல்வேறு இதர செலவுகளை கூட்டத்திலேயே ஏற்றுக்கொண்ட  அமைப்புகளின் தலைவர்கள், மாநில மாநாட்டிற் கான உணவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக் கான செலவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம் ஒன்றியக் குழுக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள்,  சிஐடியு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்,  மாற்றுத்திறனாளிகள் சங்கம், தமிழ்நாடு அடி மனை சங்கம், ஜாக் அமைப்பு, மின் ஊழியர் மத்திய  அமைப்பு, சிறுபான்மை நலக்குழு, அரசு ஊழியர்  சங்கம், ஆசிரியர் சங்கம், தமுஎகச உள்ளிட்ட அமைப்புகள் ஏற்றுக்கொள்வதாக நிர்வாகிகள் மேடையிலேயே அறிவித்தனர்.  வரவேற்புக் குழு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.