“ஆங்கிலம் கற்றுக்கொள்வதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை”
வியாழனன்று தில்லியில் நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும்” எனக் கூறினார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்தியா வின் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் கேள்வி கேட்பதையும், முன் னேறுவதையும் போட்டியிடுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில் ஆங்கிலம் உங்கள் தாய் மொழியைப் போல முக்கியமானது. ஏனெனில், வேலைவாய்ப்பையும் தன்னம்பிக்கையையும் ஆங்கிலம் அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும் ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான பாதை ஆங்கிலம் மட்டுமே. ஆங்கிலம் என்பது அணை அல்ல, அது ஒரு பாலம். அவமானம் அல்ல, அது ஒரு சக்தி. சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி” எனக் குறிப்பிட்டுள்ளார்.