தெலுங்கானா: அமெரிக்க தூதரகம் முன்பு இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் படுகொலைப் போரைக் கண்டித்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் தெலுங்கானா மாநில செயலாளர் ஜான் வெஸ்லி மற்றும் பிற இடதுசாரி தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.