அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அறந்தாங்கி, ஜுன் 9-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமையில் நடைபெற்றது.
பிகாம் வணிகவியல், பிபிஏ வணிக நிர்வாகவியல், பிஏ வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை சேர்க்கை ஆனை வழங்கினார்.
இந்த கலந்தாய்வில் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் மு.அன்பழகன், பிஏ தமிழ் துறைத் தலைவர் முனைவர். கி.காளிதாஸ், பிஏ வரலாறு துறைத் தலைவர் முனைவர் கண்னையா, மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.