90 நாட்களை கடந்தும் நெல் கொள்முதல் பணம் வழங்காத அதிகாரிகள்
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் விவசாயிகள் மறியல்
காஞ்சிபுரம், ஜூன் 9- விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்படாததால் (ஜூன் 9) திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பயிரிடப்படும் நெல் மூட்டை களை கொள்முதல் செய்ய மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய இரு துறைகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்தது. இதில் தமிழ்நாடு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், தேசிய கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கடந்த 90 நாட்களுக்கு மேலாகியும் பணம் விவ சாயிகளுக்கு வழங்க படவில்லை. இது குறித்து விவசாயிகள் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என பல வகைகளில் விவசாயிகள் மனுக்கள், போராட்டங்கள் நடத்திய நிலையில் தற்போது வரை வழங்கவில்லை என்ப தால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நேரடியாக நுகர்வோர் வாணிப மண்டல அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வந்த வாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அலு வலர்கள விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு திங்கட்கிழமைக்குள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் பணம் வரவு வைக்கப்படாததால் (ஜூன் 9) திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சி புரம் வந்தவாசி சாலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் செய்தனர். இதுகுறித்து உடனடியாக சார் ஆட்சியர், காவல்துறையினர் என பல தரப்பினரும் ஒருங்கிணைந்து விவசாயி களிடம் நேரடியாக பேச அழைப்பு விடுத்து அழைத்து சென்றனர். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் சமாதானம் செய்வது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கூட பண வழங்கப்படாத நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் ஆவேசமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.