tamilnadu

img

முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூர், மே 23- திருவாரூர் ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கௌரவ ஆலோசகர் வி.தர்மதாஸ், மாவட்ட தலைவர் த.ராமன், மாவட்ட செயலா ளர் ஆர்.முருகானந்தம் ஆகியோர் மனு அளித்தனர். மாவட்டத்தில் சுமார் மூவாயிரம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ள நிலையில் வாரிய உறுப்பினர்கள் சுமார் 10 பேருக்கு மட்டுமே தலா ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. எனவே அனைவருக்கும் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய் யாதவர்களை தொழிலாளர் நலத்துறை அணுகி உறுப்பினராக்கி அரசின் பணப் பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்டவை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.