tamilnadu

நலவாரிய உதவித்தொகை  வழங்கக் கோரிக்கை

 பொன்னமராவதி, ஜூன் 6-   கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு நல வாரியம் மூலம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை நிவாரண தொகை கிடைக்காததால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ பெர்மிட் வைத்துள்ள அனை வருக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி பொன்னமராவதியில் ஆட்டோ தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.