tamilnadu

img

6 மாத ஊதியம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை,ஆக.17- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத நிலுவை ஊதி யத்தை பெற்றுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஊழி யர்கள் ஈடுபட்டனர். சிஐடியு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.காங்கேயன் தலைமை தாங்கி னார் தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் வி.உதயகுமார்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.பாரி, பொருளாளர் எஸ். தண்டபாணி, நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், வே. சங்கர், ஏ.சேகர், கே.சரவணன், எம்.ரவி, ஆர்.கமலக்கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, தொழிலா ளர்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.