articles

img

பள்ளிகளில் காலநிலை கல்வித் திட்டம்

பள்ளிகளில் காலநிலை கல்வித் திட்டம்

அமைச்சர்  தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.28 - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் ரூ.24 கோடி யில் ‘காலநிலை கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “அண்மைக் காலமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் என்பது பொருளா தாரம் மற்றும் சமூகங்களை பாதிக்கும் பெரும் சவாலாக கால நிலை மாற்றம் உருவெடுத்துள் ளது” என்றார்.  இந்தியாவின் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மற்றும் 1076 கிலோ  மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை யை தன்னகத்தே கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. அது மட்டு மல்ல, காலநிலை மாற்ற பாதிப்பு கள் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகி யவற்றின் பாதிப்புக்கு அதிகளவு ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள ஒரு மாநிலமும்கூட தமிழ்நாடு.  இந்த சவால்களை எதிர் கொள்ள வேண்டியதன் அவசி யத்தை உணர்ந்து கார்பன் சமநிலை யை அடைவதற்கு தேசிய இலக்கை காட்டிலும், முன்னரே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என அறிவித்திருப்பது காலநிலை மாற்றத்திற்கான நம் மாநிலத்தின் உறுதிப்பாட்டை பறை சாற்றுகிறது என்றும் தெரிவித்தார். கடந்த 2024-2025 ஆம் நிதி  ஆண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் 6.5 சதவீத மாக இருந்த நிலையில், தமிழ கத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் முன்னெப்போ தும் இருந்திராத மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த நீடித்த வளர்ச்சி வாயிலாக, 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை நம்மால்  எளிதாக எட்ட முடியும் என்றும் அமைச்சர் கூறினார். சேவைத் துறையின் வளர்ச்சி 12.7 சதவீதமாக அதிகரித்திருக் கிறது. ஓய்வூதியத்தைப் பொறுத்த வரை, தமிழகத்தில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்களில் 100  வயதை கடந்தவர்களும் உள்ள தாக தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில், மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீர்காழி, சாத்தூர், திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் ரூ.10.96 கோடி யில் புதிய சார்நிலை கருவூலக அலு வலகங்கள் கட்டப்படும். கரு வூலம் மற்றும் கணக்குத் துறையில் புதியதாக பணி நியமனம் செய்யப் பட்ட 250 பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். அரசு தணிக்கையாளர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும். தணிக்கை யர்கள் மற்றும் தணிக்கை நிறு வனங்களின் சந்தேகங்களை உட னுக்குடன் நிவர்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஓர் உதவி மையம் நிறுவப்படும். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன்மூலம் பள்ளிகளில் சூழல் மன்றங்கள் விரிவுபடுத்தப்படும். மாணவர்களுக்கு இயற்கை முகாம்கள் நடத்தப்படும். கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும்  தூத்துக்குடியில் ரூ.10 கோடியில் உயிர்க் கேடயங்கள் உருவாக்கப் படும். இராஜபாளையம் சஞ்சீவி மலையை பாதுகாக்கவும், காடு களை வளர்க்கவும் ரூ.5 கோடியில் சஞ்சீவி மலை மறுசீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழக ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் வகையில் ரூ.4 கோடியில் முன்னோடி திட்டம்  மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.