tamilnadu

சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

பழனி:
பழனி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். கடந்த ஆறு மாத காலமாக மாத ஊதியம் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றம் சாட்டிய பணியாளர்கள். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.சிவகங்கையில் வட்டாரத் தலைவர் சதுரகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டப் பொருளாளர் முத்தையா, மாநிலத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.