டிஎஸ்பிக்கள் 40 பேர் பணியிட மாற்றம்!
சென்னை, ஜூலை 14- தமிழகத்தில் 40 காவல் துணைக் கண்காணிப் பாளர்களை பணியிட மாற்றம் செய்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு ள்ளார். இதன்படி, சென்னை மாநகரக் காவல்துறையின் எம்கேபி நகர் சரக காவல் துறை உதவி ஆணையர் மணிவண்ணன் மன்னார்குடி காவல்துணைக் கண்காணிப் பாளராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் காவ்யா மணப் பாறை காவல் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கோவை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையர் செல்வம், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி, சென்னை திருமங்கலம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் உள்ளிட்ட பிற அதிகாரி களும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.