சிங்கம்புணரி அருகேயுள்ள இரணிப்பட்டியில் முருகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழப்பு.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள இரணிப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிடங்கில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறியதில் முருகனின் மனைவி மீனா படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மீனா சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.