யூடியூப்பில் ஆபாசமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் கைது
கோவை, ஜூலை 16- திராவிடர் கழக துணை பொதுச் செயலா ளர் மதிவதனி குறித்து ஆபாசமாக யூடியூப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி யின் ஆதரவாளர் சாரங்க பாணி என்பவரை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரங்க பாணி. இவர், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாள ராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில், யூடி யூப் சேனலில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக, அறு வறுக்க தக்க வகையில் பேட்டியளித்து இருந் தார். இது தொடர்பாக கோவை மாவட்ட திராவி டர் கழகச் செயலாளர் பிரபாகரன், மாநகரக் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகா ரின் மீது பந்தய சாலை காவல் துறையினர் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடலூரை சேர்ந்த சாராங்கபாணி ஒசூரில் இருப்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கோவையில் இருந்து ஒசூர் சென்ற தனிப்படையினர் சாரங்கபாணியை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.