tamilnadu

img

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, பிப்.23- தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் அனைத்து ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட முன்னணி ஊழியர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்ட தலை வர் எஸ்.ஜபருல்லா தலைமை தாங்கினார். மாநில தலைவர் அன்பரசு, மபொது செயலா ளர் செல்வம், பொருளாளர் பாஸ்கரன், துணை தலைவர் மங்கள பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை யினை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு ஊழி யர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியத்தில் பணியாற் றும் பல்வேறு பிரிவினர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் ரெங்க சாமி வரவேற்றார். பொருளா ளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.