tamilnadu

img

அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜூன் 1- புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி, மற்றும் சமுதாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து அறந் தாங்கி மண்டிக்குளம் கரை யில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் பொருளாளர் சேக் இஸ்மாயில் மற்றும் துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை யில் 10 ஆண்டுகள் கழித்த சிறை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் நாகூர் கனி கோரிக்கை கோஷங்க ளை முன்மொழிந்தார்.  மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலா ளர் அப்துல் ஹமீது, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் முகம்மது ரியாஸ், மாவட்ட துணை தலைவர் முகம்மது ஆரிப், நகர மாண வரணி செயலாளர் சேக் பரீத், தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலா ளர் நோக்கியா சாகுல் வர வேற்றார். நிறைவாக ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி நன்றி கூறினார்.