tamilnadu

img

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

காஞ்சிபுரம்,ஜூன் 11- காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் களகாட்டூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பள்ளி சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையில் மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.