tamilnadu

img

கடலூர் துறைமுகத்திலிருந்து பாய் மரப்படகில் மாணவர்கள் சாகசப் பயணம்!

கடலூர் துறைமுகத்திலிருந்து  பாய் மரப்படகில் மாணவர்கள் சாகசப் பயணம்!

கடலூர், ஜூன் 12- டெல்லியில் அடுத்தாண்டு  நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாண வர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்று  கடல் சாகசப் பயணம்.  என்.சி.சி. மாணவர் கப்பல் படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகசப் பயணம் ஜூன் 11 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்கியது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாண வர்கள் கடல் சாகசப் பாய்மர படகு செலுத்தும் பயணத்தை மேற்கொண்டு வரு கின்றனர். 302 கிலோமீட்டர் பாய்மரப்படகில் சாகசப் பயணம் கடலூர், பரங்கிப்  பேட்டை, பூம்புகார் வழியாக காரைக் தகால் சென்றடைந்து மீண்டும் அதே வழி யில் திரும்ப உள்ளது. இந்தக் கடல் சாகசப் பயணத்தில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை கடலூர் துறை முகத்திலிருந்து காலை 6 மணியளவில் தொடங்கியது. இந்தச் சாகசப் பய ணத்திற்கு இடையே கடற்கரையை தூய்மை செய்தல் போன்ற சமுதாயச் சேவை நிகழ்வுகளும், தீத் தடுப்பு மேலாண்மை, முதலுதவி அளித்தல், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் மாணவர்களுடன் பய ணத்தில் லெப்டினன்ட் கமாண்டர் செந்தூர், லெப்டினன்ட் அருன்நாத் ஆகிய இரு கடற்படை அதிகாரிகளும், சப்-லெப்டினன்ட் கோபிநாதன், சப்-லெப்டினன்ட் விஜயானந்த், சப்-லெப்டினன்ட் தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் கப்பற்படைப் பயிற்று நர்களும் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மருத்துவக் குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்தக் குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், ரத்ததான முகாம், மரம் நடுதல், கடற்கரைத் தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமுதாய சேவைச் சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர். தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப் படையில் மாண வர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.