வள்ளலாரின் கனவு-தமிழகத்திற்கு “நல்ல தருணம்”
ஜுன் 11-20 மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்
மதுரைக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா “நான் தில்லியில் இருந்தாலும் எனது காதுகள் தமிழ் நாட்டை நோக்கியே திரும்பி இருக்கும்” என்று வசனம் பேசினார். தமிழ்நாட்டின் மீது அவ்வளவு அக்கறை இருப்பதாக காட்டிக் கொண்டார். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வர் உள்பட தமிழக மக்கள் தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்புவது அமித் ஷாவின் காதுகளில் கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டுமென்ற மக்களின் குரல் ஏன் அவர் காதுகளுக்கு எட்டவில்லை? ஒன்றிய பாஜக அரசின் முதலாளித்துவக் கொள்கை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களையும் பாதித்து வருகிறது. தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை குலைத்து வருகிற வேலையை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. இந்திய கார்ப்பரேட் நலன்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு கூடிக் குலாவுகிற அரசாக மோடி அரசு செயல்படுகிறது. இன்னமும் பஹல்கா மில் நடந்த படுகொலை பற்றிய உண்மைகள், பாது காப்புக் குறைபாடுகள், அமெரிக்க தலையீடு உள்ளிட்ட எதையும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தி மக்க ளுக்கு விளக்கிட மோடி அரசு தயாராக இல்லை. இடையறாத விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் வேலையின்மை, பட்டினி, ஊட்டச்சத்து குறைவு, சமூக நலத் திட்டங்களை சுருக்குவது, தொழில், விவசாய உற்பத்தியின் மந்த நிலை ஆகிய அனைத்தும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட், நவீன தாராளமயக் கொள்கை கள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள். மறுபுறம், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படும் பெருமுதலா ளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசாக பாஜக அரசு செயல் பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த கொள்கைகளை தமிழகம் முழுவதும் பலநூற்றுக்கணக்கான பயணக்குழுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அம்பலப் படுத்தி வருகின்றன.
தமிழகத்தின் முற்போக்கு நெறிகள்
பாஜக தமிழகத்தில் மேலாதிக்கம் செலுத்திட முனைப்போடு முயற்சி செய்து வருகிறது. அதிமு கவை வளைத்துப்போட்டு மதவெறிக்கும், கார்ப்பரேட் மூலதன வெறிக்கும் தமிழகத்தை களமாக்கிட பாஜக முயற்சித்து வருகிறது. இதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பிரச்சார இயக்கம் வலியுறுத்தி வருகிறது. வள்ளலார் தனது திருவருட்பாவில் “இது நல்ல தருணம்”, என்ற பாடலில் எவை ஒழிந்திட வேண்டு மென்று ஒரு வரிசையை மிக அழகாக அடுக்குகிறார்.
“மதித்த சமய மத வழக்கெல்லா மாய்ந்தது! வருணாச்சிரமம் எனு மயக்கமும் சாய்ந்தது! கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது! கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல தருணம்…” “குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று! குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது! விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது! இது நல்ல தருணம்.”
இதில் வள்ளலார் மனிதநேயம், பகுத்தறிவு, மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, வர்ணாசிரம ஒழிப்பு, ஆன்மீகம், மூடநம்பிக்கை ஒழிப்பு என பல நெறி களை வலியுறுத்திக் கொண்டாடுகிறார். இதுவே தமிழ கத்தின் முற்போக்கு பாரம்பரியம். வள்ளலார் எவை ஒழிந்திட வேண்டும் என்று இலட்சியக் கனவு கண்டாரோ, அவைதான் இன்று இந்துத்துவா வடிவத்தில் பேயாட்டம் ஆடி வருகிறது. தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்றுவதை தடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டு மல்ல, மக்கள் அனைவரின் கடமை. தமிழகத்தில் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வரும் பிரதேச முதலாளித்துவக் கட்சிகள் ஒன்றிய அரசு பின்பற்றும் நவீன தாராளமய பாதையில் பயணித்து வருவதால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இதன் நேரடி வெளிப்பாடாக, தமிழக வேலை வாய்ப்பு சிக்கல்களை சொல்லலாம். பட்டப்படிப்பு முடித்த 40-லிருந்து 45% வரையிலான இளைஞர்க ளுக்கு, உறுதியான, சமூக பாதுகாப்போடு கூடிய வேலைகள் கிடைப்பதில்லை. 2018ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் சமூக பாதுகாப்பற்ற, முறைசாரா வேலை களை தங்களுடைய சாதனையாக பாஜகவினர் பேசி வந்தனர். மோடி பக்கோடா விற்று பிழைப்பது வேலை இல்லையா என்று கேள்வி எழுப்பி, இதெல்லாம் எங்கள் சாதனை என மக்களை ஏமாற்றினார். குறைந்த வருமா னத்துடன் அதிக உழைப்புச் சுரண்டல் கொண்ட வேலைகள் எல்லாம் வேலைவாய்ப்புதான் என்று சாதிப்பது நவீன தாராளமய வாதம். இது தமிழ கத்திலும் நீடிக்கிறது. திமுக ஆட்சி பல வரவேற்கத்தக்க நடவடிக்கை களை மேற்கொண்டு வந்தாலும், அவர்கள் எதைச் செய்யவில்லை, உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் என்ன என்பதை எடுத்து ரைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் வீறு கொண்டு முன்னேறி வருகிறது. நீண்ட கால நோக்கில் உழைக்கும் வர்க்க நலன் சார்ந்த மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும்.
இடதுசாரிகளின் வரலாற்றுச் சாதனைகள்
கடந்த காலங்களில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா உள்ளிட்ட இடது அரசாங்கங்கள் ‘நாங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி செய்ய வில்லை; எவ்வளவு அதிகார வரம்பு உள்ளிட்ட கட்டுப்பா டுகள் இருந்தாலும், மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக, ஆதிவாசி உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்காகவே செயல்படுவோம்’ என்று இந்திய வரலாற்றில் இடதுசாரிகள் நிரூபித்துள்ளனர். அந்த அனுபவத்தை புறக்கணிக்க முடியாது. அந்த வர லாற்று அனுபவத்தினை தமிழ்நாடு நிலைமைகளுக் கேற்ப பொருத்தி, இடது திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியும் சமூக–பொருளாதார சாதனை களை சாதித்துள்ளது. சுகாதாரத்தை ஒரு அடிப்படை உரிமையாகக் கருதி, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நவீன அரசு மருத்துவ கட்டமைப்புகளை கேரள அரசு உருவாக்கியுள்ளது. அத்துடன் அரசு மருத்துவமனைகளை புதுப்பித்து தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை செய்துள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள், லைப் மிஷன் (LIFE Mission) திட்டத்தின் கீழ், நிலமற்றவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது, வீடு என்பது மக்களின் உரிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்கள் அதி கரிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் (Start-up) கேரளா எனும் திட்டத்தின் மூலம், தொழில் முனைவோர்களுக்கு உந்துதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் முதலிடம் வகிக்கும் ஸ்டார்ட் அப் மாநிலமாக கேரளா திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை திறம்படக் கையாண்டு, விவசாய உற்பத்தி மேம்பாட்டிற்கான திட்டங்களை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. கிராம சபை களின் மூலம் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதும் உண்மையான ஜனநாயக அடித்தளத்தை வளர்ப்பதாக அமைந் துள்ளது. தனியார் லாப வேட்டைக்கான தளமாக கேரளாவை மாற்றிடாமல், சமத்துவமும், சமூக நீதியும், அடிப்படை உரிமைகளும் நிலைத்திருக்கும் ஒரு ஆட்சியை கட்ட மைக்க மகத்தான முயற்சியை கேரளாவின் இடதுசாரி ஆட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் நீண்ட கால நோக்கில் இடதுசாரி மாற்றம் உருவாவதுதான் இன்றைய தமிழக பிரச்சனை களுக்கு தீர்வாக அமையும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவில் இடது ஜனநாயக மாற்றுக்கான தமிழக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கான மாற்றுப் பாதைக்கான அடித்தளமாக மாற்றுக் கொள்கைகளும் மாற்றுக் கோ ரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் பிரச்சார இயக்கத்தில் அவை மக்க ளிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த மாற்றத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மாநி லக்குழு அறிக்கை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது,
“இடதுசாரிக் கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும் அறிவு ஜீவிகள், பல்வேறு விவசாய அமைப்புகள், சமூகப் பார்வையுள்ள ஊடகவியலாளர்கள், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப் பகுதி யினர், பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரிடையே செயல்படும் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப் பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெ டுத்து செயல்படும் சமூக இயக்கங்கள், பல்வேறு துறைகளில் மக்கள் பிரச்சனைகளுக்காக உண்மையாக பணியாற்றும் தொண்டு நிறுவ னங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை மாற்றுக் கோரிக்கைகளுக்காக ஒன்றுபடுவது அவசியம் .
தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலா ளர்கள் / விவசாயிகள், நடுத்தர வர்க்கம், சிறு/ குறு/நடுத்தர தொழில் முனைவோர், வணி கர்கள் மற்றும் சிறு வணிகர் போன்ற பிரிவினர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுகின்ற நிலையில் அனைத்து சக்திகளின் ஒற்றுமை உரு வாக்கிட வேண்டும்.”
(தமிழ்நாட்டிற்கான இடது ஜனநாயக திட்டம் - 2023)
எனவே, தற்போது நடைபெற்றுவரும் கிளர்ச்சி – பிரச்சார இயக்கம் வழியாக இலட்சக்கணக்கான மக்களை இல்லம் தேடி சந்தித்து உரையாடல்கள் நடந்து வருகின்றன. முன்னேறி வரும் இந்த இயக்கம் மற்றொரு தேர்தலுக்கானதல்ல; மாற்றத்திற்கான மாபெரும் முன்னெடுப்பு. இதற்கு தமிழக மக்களின் பேராதரவு தொடரட்டும்!