குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு இலக்கு: உலகளவில் தோல்வி
நியூயார்க்,ஜூன் 13- சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF) இணைந்து குழந்தைத் தொழி லாளர்கள் ஒழிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டன. இதில் உலக அளவில் சுமார் 13.8 கோடி குழந்தைகள் இன்றும் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரி வித்துள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் முறை யை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என 2015 இல் ஐ.நா.வால் நிர்ணயிக்கப் பட்ட இலக்கு கடுமையான பின்ன டைவைச் சந்தித்துள்ளதை இவ் வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. முதலாளிகளுக்கு ஆதர வான கொள்கைகள், தொடரும் போர்கள், காலநிலை மாற்றத் தால் ஏற்படும் விவசாய பாதிப்பு கள் உள்ளிட்ட காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கட்டாயமாக இடம்பெயர வேண்டிய சூழல் உரு வாகியுள்ளது. இவற்றுடன் தீவிர வறுமையால் குடும்பங்கள் பாதிக்கப்படுகிற காரணத்தால் இந்தக் குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் பிழைப்பிற்காகக் கட்டாயமாக வேலைக்குச் செல் லும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அறிக் கையில் உள்ளதை விடவும் அதிகமாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. ஆறுதலளிக்கும் விதமாக, 2000 ஆம் ஆண்டு முதல் 10 கோடி குழந்தைத் தொழிலாளர்க ளும், 2020 ஆம் ஆண்டு முதல் 1.2 கோடி குழந்தைத் தொழிலா ளர்களும் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டு கிறது. இருப்பினும், உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு குழந் தைத் தொழிலாளர்கள், உள் நாட்டுப் போர், சுரண்டல் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடு களில் உள்ளனர் என்ற ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தி யுள்ளது.
ஆபத்தான பணிகளில் 5.4 கோடி குழந்தைகள்
மொத்தமுள்ள 13.8 கோடி குழந்தைத் தொழிலாளர்களில், சுமார் 5.4 கோடி குழந்தைகள் சுரங்கம் தோண்டுவது போன்ற உயிருக்கு ஆபத்தான பணிக ளில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய வேலைகள் குழந்தைகளை தொடர்ந்து தீவிர வறுமையின் பிடியில் வைத்திருப்பதுடன் கடு மையான மற்றும் பாதுகாப் பற்ற வேலைச் சூழல் காரண மாக வாழ்நாள் முழுவதும் தீராத உடல்நலக் குறைபாடுகளை உருவாக்கி, இந்தக் குழந்தை களின் ஆயுட்காலத்தைக் குறைக்கின்றது. பெரும்பாலான குழந்தை கள் குடும்ப வறுமையின் காரண மாகவே பள்ளிப்படிப்பை பாதி யிலேயே கைவிட்டு தொழிலா ளர்களாக மாறுகின்றனர். எனவே, குழந்தைத் தொழி லாளர் முறையை வேரோடு களைய, பெற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து வது மிகவும் அவசியமான மற்றும் உடனடித் தேவையாகும். அத்துடன், நாடுகளுக்கு இடை யிலான மற்றும் உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்து, உலகெங்கிலும் அமைதி யான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.