இந்தியா புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தாய்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. தாய்லாந்தின் புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் தில்லி விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமா னத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே அந்நிறுவ னத்தின் விமானம் இந்தியாவில் மிக மோசமான விபத்துக் குள்ளான நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் மெக்சிகோ குடிமகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) தடுப்புச் சிறையில் மெக்சிகோ குடியுரிமை கொண்ட ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதிய குடி யுரிமை கொள்கைப் படி வெளிநாட்டு மக்க ளை தடுப்புச் சிறையில் அடைத்து நாடு கடத்தி வருகிறது அமெரிக்க அரசு. தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் நாடு கடத்த லுக்கு எதிராகவும் டிரம்ப் அரசுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட் டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த மரணம் பதற்றத்தை மேலும் தூண்டும் என அஞ்சப்படுகிறது.
சேதமடைந்த போர்க் கப்பலை மீண்டும் சரிசெய்த வடகொரியா
கடந்த மாதம் 5000 டன் எடையுள்ள போர்க்கப்பலை கப்பற்படைக்கு அர்ப்பணித்த போது கப்பலின் அடிப்பகுதியில் சரி செய்யப்படாத சேதத்தால் பாதி மூழ்கியது. எனினும் அக் கப்பலை சில நாட்களிலேயே சரி செய்து தற்போது கப்பற்படையில் இணைத் துள்ளது வடகொரியா. பசிபிக் பெருங் கடலில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள தங்கள் கப்பல்படை, அடுத்த ஆண்டுக்குள் இதே போல மற்றொரு 5000 டன் எடை கொண்ட கப்பலை கப்பற்படையில் சேர்க்கும் எனவும் அறிவித்துள்ளது.
ஆயுத பலத்தின் மூலம் நாடுகளை பிடிக்க அமெ.திட்டம்
கிரீன்லாந்து மற்றும் பனாமாவை ஆயுத பலத்தின் மூலமாக கைப்பற்ற அமெரிக்கா திட்டங்களை வகுத் துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஒப்புக்கொண்டுள் ளார். ஆயுத சேவைகள் குழு கூட்டத் தில் கிரீன்லாந்து அல்லது பனாமா வை வலுக்கட்டாயமாக கைப்பற்ற திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது “பாதுகாப்புத் துறையில் எங்கள் வேலை, எந்தவொரு செயலுக்கும் திட்டங்களை வைத்திருப்பது தான்” என்று ஹெக்செத் கூறியுள்ளார்
காசாவில் இனப்படுகொலை செய்ய பயிற்சி கொடுக்கும் இங்கிலாந்து
காசாவில் இனப்படுகொலை செய்து வருகிற இஸ் ரேல் ராணுவ வீரர்களுக்கு இங்கிலாந்து அரசு பயிற்சி தருகிறது என்ற தகவல் வெளியாகி யுள்ளது. இந்த பயிற்சி நடவடிக்கை யை இங்கிலாந்து அரசே ஒப்புக் கொண்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் உருவாகி வரும் நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது இஸ்ரே லுடனான ராணுவ உறவின் ஒரு சாதாரண பகுதி என அந்நாட்டு அரசு சமாளித்து வருகிறது.